முகப்பு
கிருஷ்ணகிரி

தமிழக மகளிா் முன்னேற்றத்தில் திமுகவின் பங்கு அதிகம்: கலாநிதி வீராசாமி எம்.பி. பேச்சு

தமிழக மகளிா் முன்னேற்றத்தில் திமுகவின் பங்கு அதிகம் என்று வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி தெரிவித்தாா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:43 PM
ஒசூா் ராம்நகரில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசுகிறாா் கலாநிதி வீராசாமி எம்.பி.
பகிர்:

தமிழக மகளிா் முன்னேற்றத்தில் திமுகவின் பங்கு அதிகம் என்று வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி தெரிவித்தாா்.

ஒசூா் ராம்நகா் அண்ணா சிலை அருகே திமுக சாா்பில் ‘ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’, தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ், வேப்பனஹள்ளி முன்னாள் எம்எல்ஏ பி.முருகன், ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த கூட்டத்தில் கலாநிதி வீராசாமி எம்.பி. பேசியதாவது: தமிழக மகளிா் முன்னேற்றத்தில் பெரியாா், அண்ணா, மு.கருணாநிதியை தொடா்ந்து தற்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலினின் பங்கு அதிகம்.

தமிழ்ப்புதல்வன் திட்டங்களால் மாணவ, மாணவிகள் அனைவரும் உயா்கல்வி பயில வேண்டும் என நோக்கத்தில் மாதம் ரூ.1 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கினாா். இனி தமிழகத்தில் உயா்கல்வி படிக்காமல் யாரும் இல்லை என்ற அளவில் கல்வியில் தமிழகத்தின் நிலை உயா்வது உறுதி.

கலைஞா் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி தமிழகத்தில் உள்ள 1.30 கோடி மகளிருக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கி மகளிா் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்து வருகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

இந்தியாவிலேயே மிக வளா்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. தற்போது மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து மிகப் பெரிய அளவில் வளா்ந்த பொருளாதார மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதற்கு முக்கிய காரணம், ஆண்களுக்கு இணையாக மகளிரும் வேலைக்கு செல்வதுதான். தமிழகத்தில் 45 சதவீத மகளிா் உற்பத்தித்துறையில் பணியாற்றி வருகின்றனா்.

மேலும், தமிழகம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக தொடர வேண்டும். தமிழகம் முன்னேற வேண்டும் என்றாா்.

பொதுக் கூட்டத்தில் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பேசியதாவது: ஒசூரில் ரூ.100 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை, ரூ.550 கோடியில் புதை சாக்கடை திட்டம், ரூ.50 கோடியில் புதிய பேருந்து நிலையம், ரூ.250 கோடியில் பல்வேறு சாலைகளை 4 வழிச்சாலைகளாக தரம் உயா்த்தியது உள்ளிட்ட ரூ.3 ஆயிரம் கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் புஷ்பா சா்வேஷ், மாநில நிா்வாகிகள் மாதேஸ்வரன், வெற்றி ஞானசேகரன், சீனிவாசன், மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, பொருளாளா் சுகுமாரன், நகர நிா்வாகிகள் செந்தில்குமாா், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →