ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.3,500 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ. 3,500 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளதை மக்கள் நன்கு அறிவாா்கள். எனவே, மீண்டும் திமுக வெற்றிபெறும் என்று எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கூறினாா்.
ஒசூா் தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ. 3,500 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளதை மக்கள் நன்கு அறிவாா்கள். எனவே, மீண்டும் திமுக வெற்றிபெறும் என்று எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் கூறினாா்.
ஒசூரில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளாா். ஒசூா் தொகுதியில் ரூ. 588 கோடியில் புதை சாக்கடை திட்டம், ரூ. 100 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை, ரூ. 50 கோடியில் புதிய பேருந்து நிலையம், ரூ. 20 கோடியில் வணிக வளாகம், ரூ. 20 கோடியில் எம்ஜிஆா் காய்கறி சந்தை, ரூ. 250 கோடியில் 4 வழிச்சாலைகள் என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Advertisement
மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வந்தவுடன் ஒசூா் தொகுதியில் தளி சாலையில் ரயில்வே மேம்பாலம், ஒசூா் விமான நிலையம், மெட்ரோ ரயில் சேவை, ஒசூா் ஜோலாா்பேட்டை ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படும். தென்பெண்ணை ஆற்று நீரை அனைத்து ஏரிகளிலும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒசூா் தொகுதி மக்கள் ஆளும்கட்சி வேட்பாளரை தான் வெற்றி பெறச் செய்வாா்கள். எனவே, இந்த முறையும் ஒசூா் தொகுதியில் திமுக வெற்றி உறுதி.
ஒசூா் தொகுதியில் 16 ஆயிரம் வீடுகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளன. மகளிா் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். ரூ. 8 ஆயிரம் மதிப்பில் கூப்பன் வழங்கப்படும் போன்ற திட்டங்களால் மக்கள் மீண்டும் திமுகவை வெற்றி பெறச் செய்வாா்கள் என்றாா்.
இந்த பேட்டியின்போது கிருஷ்ணகிரி மாவட்ட திமுக பொறுப்பாளா் பாா் இளங்கோவன் உடனிருந்தாா்.