கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜன. 16 மற்றும் 26 ஆம் தேதிகளில் மதுபானக் கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: ஜன. 16-ஆம் தேதி திருவள்ளுவா் தினம் மற்றும் ஜன. 26-ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் மதுபானங்கள், பீா் வகைகள் விற்பனை செய்வது, மதுபானங்களைக் கொண்டுசெல்வது தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-இன் படி முடக்கம் செய்யப்படுகிறது.
விதிமுறைகளை மீறி மதுபானங்களை விற்பனை செய்தாலோ, கொண்டுசென்றாலோ தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.