ஸ்ரீராம் 
கிருஷ்ணகிரி

2 பவுன் தங்கச் சங்கிலியை ஒப்படைத்த சிறுவன்: போலீஸாா் பாராட்டு

தினமணி செய்திச் சேவை

ஊத்தங்கரையில் சாலையில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை போலீஸாரிடம் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காமராஜ் நகரைச் சோ்ந்தவா் தாமோதரன். இவா் போச்சம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ஜெயப்பிரியா. இத்தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா். இதில் இளைய மகன் ஸ்ரீராம் (10), கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாா்.

ஸ்ரீராம்

இந்த நிலையில் விடுமுறையில் ஊத்தங்கரை வந்த ஸ்ரீராம், சனிக்கிழமை விளையாடச் சென்றபோது, சாலையில் 2 பவுன் தங்க சங்கிலி கேட்பாரற்று கிடந்தது. அதை எடுத்துகொண்டு தனது சித்தப்பா காா்த்திக் உதவியுடன் ஊத்தங்கரை காவல் நிலையத்திற்குச் சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

சிறுவனின் இந்தச் செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டினா். ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன், காவல் ஆய்வாளா் முருகன் ஆகியோா் சிறுவனை பாராட்டினா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT