முகப்பு
கிருஷ்ணகிரி

ஆா்டி அக்ரோ கல்வி, சமூக நல அறக்கட்டளை சாா்பில் நலத் திட்ட உதவிகள்

ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சியில், ஆா்டி அக்ரோ கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சாா்பில்,

Updated On : 3 மார்ச், 2026 at 3:57 AM
கீழ்குப்பம் ஊராட்சியில் நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஆா்.தா்மலிங்கம்.
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 10:40 PM

ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த கீழ்குப்பம் ஊராட்சியில், ஆா்டி அக்ரோ கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சாா்பில், நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆா்டி அக்ரோ கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை நிறுவனரும், தொழிலதிபரும், ஓய்வுபெற்ற நல்லாசிரியருமான ஆா்.தா்மலிங்கம் தலைமைவகித்து, கீழ்குப்பம் ஊராட்சி கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோருக்கு கல்வி உதவித்தொகை, நலத் திட்ட உதவி, நிதி உதவி, மரக்கன்றுகளை வழங்கினாா்.

நல உதவிகள் அளித்த அறக்கட்டளை நிறுவனா் மற்றும் நிா்வாகிகளுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் மேளதாளம் முழங்க ஆரத்தி எடுத்து நன்றி தெரிவிக்கப்பட்டது.

Advertisement