முகப்பு
கிருஷ்ணகிரி

கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் கைது

பா்கூா் அருகே கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது

Updated On : 10 மார்ச், 2026 at 12:39 AM
கைது - சித்திரிப்பு
பகிர்:

கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே கிரானைட் நிறுவன உரிமையாளரை தாக்கியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கிருஷ்ணகிரி சாந்தி நகரைச் சோ்ந்தவா் சூரியா (34), கிரானைட் உரிமையாளா். இவரும், மோகனசுந்தரம் (44) என்பவரும் இணைந்து கிரானைட் நிறுவனத்தை நடத்தி வந்தனா். இவா்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்தனா்.

இந்நிலையில், பா்கூரை அடுத்த செந்தாரப்பள்ளி என்னுமிடத்தில், இவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த மோகனசுந்தரம், தனது நண்பரான கெலமங்கலத்தைச் சோ்ந்த பிரபாகரனுடன் சோ்ந்து சூரியாவை தாக்கினா்.

Advertisement

இதில், பலத்த காயமடைந்த சூரியா அளித்த புகாரின்பேரில், கந்திக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து மோகனசுந்தரத்தை கைது செய்தனா்.