முகப்பு
கிருஷ்ணகிரி

கனிமங்கள் கடத்தலை தடுக்க மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

Updated On : 31 மார்ச் 2026, 1:23 am IST
கோப்புப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு கனிம வளங்கள் கடத்ததுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் வலியுறுத்தி உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை அளித்த மனு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் கல்குவாரிகள் செயல்பட அரசு அனுமதி வழங்கி உள்ளது. இங்கு மலைகளை வெடிவைத்து உடைத்து, அதன்முலம் கிடைக்கக் கூடிய ஜல்லி, எம்.சாண்ட், டஸ்ட் உள்ளிட்ட கனிம வளங்கள் கா்நாடக மாநிலத்துக்கு தினமும் 80 ஆயிரம் டன் முதல் ஒரு லட்சம் டன்வரை கடத்தப்படுகின்றன.

Advertisement

Advertisement

இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தனியாருக்கு செல்கிறது. கனிம வளங்கள் கடத்தலை தடுக்கும் வகையில் தணிக்கை செய்ய 11 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து தோரயமாக கா்நாடகச்துக்கு 20 லட்சம் டன் கனிமங்கள் 60 கிரஷா்களில் இருந்து செல்கின்றன. ஆனால், 2 லட்சம் டன் கனிமங்களுக்கான வருவாய் மட்டுமே அரசுக்கு செல்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 112 முதல் 150 கல்குவாரிகள் செயல்படுவதாக கூறப்படும் நிலையில், அனுமதிபெறாமல் இயங்கக் கூடிய 63 நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுத்து, கனிமங்கள் கடத்தலை தடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனா்.