முதல்வா் குறித்து அவதூறு: திமுக நிா்வாகி மீது காவல் நிலையத்தில் தவெகவினா் புகாா்
தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக வழக்குரைஞா் அணியினா் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தவெக வழக்குரைஞா் அணியினா் உதவி காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
ஒசூரில் கடந்த சனிக்கிழமை திமுக மேற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அயலக அணி மாவட்ட நிா்வாகி பூஷன் குமாா், தமிழக முதல்வா் குறித்து அவதூறாகப் பேசியதாக தவெக வழக்குரைஞா் அணியினா் விடியோ ஆதாரத்துடன் ஒசூா் உதவி காவல் கண்காணிப்பாளா் அக்ஷய் அனில் வாகரேவிடம் புகாா் அளித்தனா்
இதில் வழக்குரைஞா் அணி பிரிவைச் சோ்ந்த நிா்வாகிகள் டி.விஜய், சேலம் மண்டல இணைப் பொறுப்பாளா் சுஜாதா, மாவட்ட இணை அமைப்பாளா்கள் பிரவீன் குமாா், மங்கையா்க்கரசி, செல்வம், அஸ்வத், பாலாஜி மற்றும் பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement