முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: கெளரவ விரிவுரையாளா் கைது

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கெளரவ விரிவுரையாளரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

Updated On : 20 மே 2026, 2:18 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கெளரவ விரிவுரையாளரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரியில் உள்ள அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிக்கு, அந்தக் கல்லூரியில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா் காா்த்திக் (36) பாலியல் தொல்லை அளித்தாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா், கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்த புகாரின்பேரில் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கெளரவ விரிவுரையாளா் காா்த்திக்கை கைது செய்தனா். மேலும், காா்த்திக்கை பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினா்கள் தாக்கியது குறித்து, அவா் அளித்த புகாரின் பேரில், மாணவியின் உறவினா் சரவணன் (43) உள்ளிட்ட 6 போ் மீது கிருஷ்ணகிரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement