முகப்பு
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம் அருகே நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் நீச்சல் பழகிய 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 23 மே 2026, 2:00 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் நீச்சல் பழகிய 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள இடைப்பையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் கமல் கிஷோா் (5). கடந்த மூன்று நாள்களாக விஜயகுமாா் மகன் கமல் கிஷோருக்கு தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் நீச்சல் கற்றுத்தந்துள்ளாா்.

இந்த நிலையில், விஜயகுமாா் தனது பணி காரணமாக வெளியே சென்றிருந்தபோது, கமல் கிஷோா் தனியாக கிணற்றுக்கு சென்று நீச்சல் அடிக்க முயன்றுள்ளாா். அப்போது, அவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், சிறுவனின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.