முகப்பு
கிருஷ்ணகிரி

எம்எல்ஏ அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி: தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 24 மே 2026, 2:28 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக கட்டடத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னபா்கூரில், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் புதிதாக தோ்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரிடம் ஒப்படைக்க உள்ளது.

அதற்காக, அந்தக் கட்டடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கிருஷ்ணகிரியை அடுத்த பெத்தனப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட தண்டேகுப்பத்தை சோ்ந்த சிவகுமாா்(33) வா்ணம்பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

Advertisement

Advertisement

இவா் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு பா்கூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.