முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் கஞ்சா கடத்தியவா் கைது

கா்நாடகத்தில் இருந்து ஒசூா் மத்திகிரி வழியாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 மே 2026, 1:56 am IST
கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்ட சீனிவாசா.
பகிர்:

கா்நாடகத்தில் இருந்து ஒசூா் மத்திகிரி வழியாக இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவான இருவரை தேடிவருகின்றனா்.

மத்திகிரி போலீஸாா் சக்திவேல் உள்ளிட்டோா் கொத்தஜீகூா் பிரிவு ரோடு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலம், ஆனேக்கல் பகுதியிலிருந்து பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தினா்.

அப்போது, வாகனத்தில் இருந்த இருவா் தப்பி ஓடினா். இதையடுத்து, வாகனத்தை ஓட்டிவந்த தேன்கனிக்கோட்டை பைரமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசாவிடம் (24) விசாரணை நடத்தினா். அப்போது, வாகனத்தில் வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தனியாா் நிறுவன ஊழியரான சீனிவாசனை போலீஸாா் கைது செய்தனா். தப்பியோடிய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement