நாமக்கல்

கபிலர்மலை அருகே குடிசை வீட்டில் தீ விபத்து

தினமணி

பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை அருகே உள்ள செம்மடாபாளையத்தில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின. இது குறித்து ஜேடர்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 கபிலர்மலை அருகே உள்ள செம்மடாபளையத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (70). இவர் தனது குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். வியாழக்கிழமை மதியம் பாப்பாத்தி வீட்டில் இல்லாத நேரத்தில் இவரது குடிசை வீட்டில் திடீரென தீப் பற்றி எரிந்துள்ளது. இதை பார்த்த இருகில் இருந்தவர்கள் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
 இருப்பினும், குடிசை வீட்டினுள் இருந்த மளிகைப் பொருட்கள் மற்றும் துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. தீ விபத்தில் எரிந்துபோன பொருள்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT