திருச்செங்கோடு நம் பசுமை அமைப்பின் சார்பில் பசுமை மராத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. 7 வயது முதல் 10 வயதுள்பட்டோர் ஒரு பிரிவாகவும், 11 வயது முதல் 13 வயது வரையுள்ளோர் ஒரு பிரிவாகவும், சிறுவர்-சிறுமியர் ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. மகாதேவ வித்யாலயம் பள்ளியிலிருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரையில் 3 கிலோ மீட்டர் தொலைவு நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், சிறுவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன.