குமாரபாளையம் அருகே விசைத்தறித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
குமாரபாளையத்தை அடுத்த கல்லாங்காட்டு வலசைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (28). விசைத்தறித் தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (26). குடிப்பழக்கம் உள்ள வெங்கடேசனால், அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கணவனைப் பிரிந்த கலைவாணி தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பலமுறை குடும்பம் நடத்த வருமாறு வெங்கடேசன் கேட்டுக் கொண்டும், கலைவாணி மறுத்துவிட்டார். இந்த நிலையில், தனது வீட்டில் சனிக்கிழமை தூக்கிட்டு வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டார். குமாரபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.