நாமக்கல்

சுமை ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: மூதாட்டி பலி, 19 பெண்கள் படுகாயம்

DIN

சுமை ஆட்டோ மீது லாரி மோதியதில் மூதாட்டி பலியானார். மேலும் 19 பெண்கள் படுகாயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சேர்ந்த 21 பெண்கள் சோளத்தட்டு அறுக்கும் பணிக்காக கோம்பைக்காட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டு மாலை வேலை முடிந்ததும்  சுமை ஆட்டோவில் ஊர்த் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஆட்டோவை தனபால் என்பவர் ஓட்டிச் சென்றார்.  எருமப்பட்டி கைகாட்டி அருகே சென்றபோது எதிரே மண் எடுப்பதற்காக வந்த டிப்பர் லாரி ஆட்டோ மீது நேருக்குநேர் மோதியது.
 இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாரியாயி (70) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆட்டோவில் பயணித்த சித்ரா, லட்சுமி, புஷ்பா, செல்லம்மாள், சுமதி உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் தப்பினார். அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT