நாமக்கல்

விவசாய கடன் தள்ளுபடி கோரி ஆர்ப்பாட்டம்

DIN

எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியச் செயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வெங்கடாசலம், கிட்டுசாமி, ஜெயந்தி, செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை அளிப்புத் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குமாரபாளையத்தில்...
வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலர் எஸ்.பாலுசாமி தலைமை வகித்தார். அனைத்துப் பொருள்களும் நியாயவிலைக் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம், நிர்வாகிகள் குருசாமி, வீரமுத்து, மாதேஸ், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT