நாமக்கல்

கார் மரத்தில் மோதியதில் சிறுமி சாவு

DIN

சமயபுரம் கோயிலுக்குச் சென்று விட்டு திரும்பும்போது திருச்செங்கோடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் காரில் பயணித்த சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  உடன் வந்த  மேலும் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியைச் சேர்ந்த சிவசங்கரன் (40). இவர், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (36) இவர் பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சம்யுக்தா (9) என்ற 3-ஆம் வகுப்பு முடித்த ஒரு மகள் உள்ளார்.
இவர்களும், இவரது உறவினர்களான ஈரோடு கொல்லம்பாளையத்தைச் சேர்ந்த மாதேஸ்வரன்(38) அவரது மனைவி தமிழ்ச்செல்வி (35) ஆகியோருடன் சமயபுரம் கோயிலுக்கு சென்றனர். சிவசங்கரன் தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
கோயிலுக்குச் சென்றுவிட்டு சனிக்கிழமை இரவு திருச்செங்கோடு நோக்கி வந்துள்ளனர். காரை மாதேஸ்வரன் ஓட்டி வந்துள்ளார். கார் வருகூராம்பட்டி பகுதியை நோக்கி வந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்த சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதனால் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி சம்யுக்தா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த மற்ற 4 பேரையும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து திருச்செங்கோடு ஊரக காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT