நாமக்கல்

விபத்தில் சிக்கியவருக்கு அமைச்சர் உதவி

DIN


விபத்தில் சிக்கி காயமடைந்த அரசு அலுவலரை மீட்ட அமைச்சர் பி. தங்கமணி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், சோழசிராமணியைச் சேர்ந்தவர் பூபாலன். பள்ளிபாளையம் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலராகப் பணியாற்றி வரும் இவர், வியாழக்கிழமை மாலை பணி முடித்து மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது பள்ளிபாளையம் அருகில் ஓடப்பள்ளி என்ற இடத்தில் எதிரில் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் அவர் காயமடைந்தார்.
அப்போது அந்த வழியாகச் சென்ற மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, பொதுமக்கள் கூடியிருப்பதைப் பார்த்து விசாரித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பூபாலனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT