நாமக்கல்

நில அளவை உதவி இயக்குநருக்கு உயர்நீதிமன்றம் சம்மன்

DIN

நாமக்கல் நில அளவை மற்றும் பதிவுத் துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாமக்கலைச் சேர்ந்தவர் டி.யேசய்யன். நில அளவை மற்றும் பதிவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் தனது ஓய்வூதியப் பலன்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் தனது ஓய்வூதியப் பலன்கள் விடுவிக்கப்பட்டால்தான், பிரிந்து வாழும் தனது மனைவிக்கு ஜீவனாம்ச நிலுவைத் தொகையை கொடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.வி. முரளிதரன் முன்னிலையில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நாமக்கல் நில அளவை மற்றும் பதிவுத் துறை உதவி இயக்குநர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 13) நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT