இளம்பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை கோரி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குமாரபாளையத்தை அடுத்த பெராந்தார் காட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் பிரியங்கா (22). பி.காம்., பட்டதாரியான இவர் பவானியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த அல்லி முருகன் மகன் பிரவீன் (23) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் அல்லிமுருகன் பெராந்தர்காடு பகுதிக்கு சென்றதோடு, அங்கு பிரியங்காவை திட்டி அவமானப்படுத்தினாராம். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், அவரது தற்கொலைக்கு காரணமானதாக பிரவீன், அவரது தந்தை அல்லிமுருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பிரியங்காவின் உறவினர்கள் திங்கள்கிழமை இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, திருச்செங்கோடு டிஎஸ்பி எஸ்.சண்முகம், ஆய்வாளர் வேலுத்தேவன் உள்ளிட்டோர் சமரசம் செய்து, மறியலை கைவிட சென்றனர்.