கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருச்செங்கோடு அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM
திருச்செங்கோடு அருள்மிகு கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
சுகந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மகா நந்திக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பிரதோஷத்தையொட்டி, அம்மன் மாடவீதிகளில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.