முகப்பு
நாமக்கல்

பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவ, மாணவியர்பொறியியல் படிப்பு நுழைவுத் தேர்வில் சிறப்பிடம்

பாவை கல்வி நிறுவனத்தின் அங்கமான பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் நீட், ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு ராஜஸ்தான் மாநிலம், கோட்டா ஆலன் நிறுவனத்துடன் இணைந்து

Updated On : 15 மே, 2018 at 2:43 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

பாவை கல்வி நிறுவனத்தின் அங்கமான பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் நீட், ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு ராஜஸ்தான் மாநிலம், கோட்டா ஆலன் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சியளித்து வருகிறது. இத் தேர்வு எழுதிய இப்பள்ளி மாணவர்கள் தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற நீட், ஜெஇஇ தேர்வில் பாவை வித்யாஸ்ரம் பள்ளியில் 69 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
இதில் மாணவர் யு.எம்.ரவிபாரத், இ.அனு அட்ஷயா, என்.ஆப்ரின், பி.அவினாஷ், ஜி.தர்ஷன் உள்ளிட்ட 37 மாணவர்கள் ஜெஇஇ., முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதில் யு.எம்.ரவிபாரத் 360 மதிப்பெண்களுக்கு 221 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் 3436-வது இடத்தைப் பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கைநடராஜன் ஆகியோர் பாராட்டினர்.
இந்திய அளவில் போட்டித் தேர்வுகளுக்கு பெயர் பெற்ற ராஜஸ்தான் கோட்டா ஆலன் கெரியர் இன்ஸ்டியூட் தமிழகத்தில் பாவை கல்விக் குழுமத்துடன் மட்டும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு பயிற்சியளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.