நாமக்கல்

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

DIN

கீரம்பூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
கோனூர் கந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் செங்கோடன் (63) விவசாயி. இவர் திங்கட்கிழமை தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கீரம்பூர் அருகே நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில்  எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் இவர் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் செங்கோடன் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பரமத்தி போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். படுகாயமடைந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த பரமத்தி அருகே ஜங்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் சக்திவேல் (27) நாமக்கல் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT