நாமக்கல்

கொந்தளம் ஊராட்சியில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்

தினமணி

கொந்தளம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமில் 300 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
 தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 15-ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்கள் கொந்தளம் ஊராட்சிக்குள்பட்ட கொந்தளம், கொந்தளம் மேட்டூர், காந்திநகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றன.
 வெங்கரை கால்நடை மருத்துவர் மணிவேல் மற்றும் ஆவின் கால்நடை மருத்துவர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் பசு,எருது மற்றும் 3 மாதங்களுக்கும் மேற்பட்ட கன்றுகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமில் 181 பசுக்களுக்கும், 110 எருதுகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. வரும் 21-ஆம் தேதி வரை நடைபெறும் இம் முகாமை கால்நடை வளர்ப்போர் அனைவரும் பயன்படுத்துக் கொள்ளுமாறு கால்நடை மருத்துவர் மணிவேல் அறிவுறுத்தினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT