பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை பரமத்தி வேலூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொத்தனூர் காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள குட்டுக்காட்டில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு சென்ற போலீஸார் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொத்தனூரைச் சேர்ந்த கார்த்திக் (22), சசிக்கண்ணன் (21), கிஷோர் (22), ஷேக் ஆரிப் (25), சதீஷ் (30), குணசங்கர் (40) மற்றும் செந்தில்ராஜா (30) ஆகிய 7 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.