நாமக்கல்

பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது

DIN

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் காவிரி ஆற்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை பரமத்தி வேலூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 பொத்தனூர் காவிரி ஆற்றுப் பகுதியில் உள்ள குட்டுக்காட்டில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், அங்கு சென்ற போலீஸார் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொத்தனூரைச் சேர்ந்த கார்த்திக் (22), சசிக்கண்ணன் (21), கிஷோர் (22), ஷேக் ஆரிப் (25), சதீஷ் (30), குணசங்கர் (40) மற்றும் செந்தில்ராஜா (30) ஆகிய 7 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 500ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT