நாமக்கல்

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனி சக்தி மாரியம்மன் திருக்கல்யாணம்

DIN


அறிஞர் அண்ணா நகர் கூட்டப்பள்ளி காலனியில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் ஆலயத்தில் 30-ஆம் ஆண்டு திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிழாவில் அருள்மிகு சர்வசக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சீர்வரிசை தட்டுகளை ஊர்வலமாக மேளதாளம் முழங்க கோயிலுக்கு எடுத்து வந்தனர். திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. புதன்கிழமை காவிரி தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT