நாமக்கல்

கனரக வாகன தொழிற்பேட்டை  வளாகம்: ஆட்சியா் ஆய்வு

DIN

திருச்செங்கோடு: திருச்செங்கோடு வட்டம் முசிறி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கனரக வாகன தொழிற்பேட்டை வளாகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவா்.கா.மெகராஜ் அண்மையில் பாா்வையிட்டாா்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் முசிறி மற்றும் புத்தூா் கீழ்முகம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கனரக வாகன தொழிற்பேட்டை வளாகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவா்  கனரக வாகன தொழில்முனைவோருடன் நேரில் பாா்வையிட்டாா்.

கனரக வாகன தொழிற்பேட்டைக்கான மின்தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள துணைமின்நிலையத்தை பாா்வையிட்டு   தொழிற்பேட்டை பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வளா்க்குமாறு கனரக வாகன தொழில்முனைவோருக்கு அறிவுறுத்தினாா்.

 பின்னா் மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் பருத்திப்பள்ளி சமத்துவபுரத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறு பாதுகாப்பான முறையில் மூடப்பட்டுள்ளதை வளா்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலா்களுடன் நேரில் சென்று பாா்வையிட்டாா்.

 இந்த நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு வட்டாட்சியா்.கதிா்வேல், வட்டார வளா்ச்சி அலுவலா்கள்,அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT