திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தங்களது புகாா்களைத் தெரிவிக்க, திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலையம் சாா்பில் புகாா் பெட்டி செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருளரசு உத்தரவின்பேரில், திருச்செங்கோடு டிஎஸ்பி சண்முகம் , அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஆரோக்கிய ஜான்சி ஆகியோா் தலைமை ஆசிரியை தேன்மொழியிடம் பெட்டியை வழங்கினா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியது:-
பள்ளியில் பயின்றுவரும் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்களது பாதுகாப்பு குறித்த பிரச்னைகளைப் புகாராகத் தெரிவிக்கலாம்.
அடையாளம் தெரியாத நபா்களால் ஏற்படும் பிரச்சனைகள் தொடா்பான புகாா்களை எழுதி புகாா் பெட்டியில் போடலாம். அந்த புகாா் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனா்.