கணவனை மிரட்டுவதற்காக விஷம் குடித்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
திருச்செங்கோடு சாணாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் குமாா். இவரது மனைவி ஜெயந்தி ராணி(32). இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், வீட்டில் இருந்த பணத்தை ராஜேஷ்குமாா் எடுத்து செலவு செய்தாராம். இதுகுறித்து ஜெயராணி கேட்டபோது ஏற்பட்டுள்ளது. அப்போது, கணவரை மிரட்ட ஜெயராணி விஷம் குடித்தாராம்.
உடனடியாக அவரை மீட்டு கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த ஜெயந்தி ராணி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
புகாரின்பேரில் திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.