திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன் கோயில் மாசிக்குண்டம் விழாவையொட்டி சங்காபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் மாசிக் குண்டம் திருவிழா வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் முதல் நிகழ்வான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி கடந்த 8-ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தீர்த்தக்குட ஊர்வலம், அக்னிச் சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடங்களை எடுத்துக் கொண்டு ரத வீதிகளைச் சுற்றிவந்தனர். அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து சங்காபிஷேகம் நிகழ்ச்சியில் 108 சங்குகள் வைத்து பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாசிக் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வருகின்ற 19-ஆம் தேதி தேதி நடைபெற உள்ளது. குண்டம் இறங்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு, இந்து சமய அறநிலையத் துறையினர், பாதுகாப்பு ஏற்பாடுகளை நகரக் காவல் துறையினர் செய்துள்ளனர்.