நாமக்கல்

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் பலி

DIN

பரமத்தி வேலூரில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் நாச்சி (70). இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் ஆடுகளுக்கு தீவனத்தை எடுத்துக்கொண்டு சைக்கிளில் வந்துள்ளார். பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையை செல்லாண்டியம்மன் கோயில் அருகே கடக்க முயன்ற போது, கரூரில் இருந்து பரமத்தி வேலூர் நோக்கி சென்ற இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நாச்சியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை மாலை நாச்சி உயிரிழந்தார். விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT