நாமக்கல்

பேளுக்குறிச்சியில் எம்ஜிஆர் சிலை: எம்எல்ஏ திறந்துவைத்தார்

DIN

பேளுக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்ட 10 அடி உயர எம்ஜிஆர் சிலையை சேந்தமங்கலம் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சேந்தமங்கலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு எம்எல்ஏ சி. சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அப்போது அங்கு கூடியிருந்த மக்களுக்கு இனிப்பு வழங்கினார். தொடர்ந்து, துத்திக்குளம், காளப்பநாயக்கன்பட்டி, வெட்டுக்காடு, மலைவேப்பங்குட்டை,  பேளுக்குறிச்சி கணவாய்மேடு, நரசிம்மன்புதூர் உள்ளிட்ட இடங்களில் கட்சிக் கொடியேற்றினார். தொடர்ந்து பேளுக்குறிச்சி காந்தி நகரில் புதிதாக அமைக்கப்பட்ட 10 அடி உயர எம்ஜிஆர் சிலையை எம்எல்ஏ திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் பேளுக்குறிச்சி ஊராட்சி கழக செயலர் ராமசாமி, சேந்தமங்கலம் பேரூர் கழக செயலர் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT