முகப்பு
நாமக்கல்

கராத்தே பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு

கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.

Updated On : 23 ஜனவரி 2019, 8:51 am IST
பகிர்:

கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டன.
நாமக்கல் அருகே புதன்சந்தை ஸ்ரீசக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சோட்டோ கான் கராத்தே அகாதெமி சார்பில் பெல்ட் பட்டயத் தேர்வு அண்மையில் நடைபெற்றது. தலைமைப் பயிற்சியாளர் வி.சரவணன், பள்ளியின் கராத்தே பயிற்சியாளர் கே.பிரபு ஆகியோர் தேர்வை நடத்தினர். 
பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் மணி (எ) வெங்கடாசலம், செயலர் துரைசாமி, தாளாளர் சி.ராஜு மற்றும் முதல்வர் சி.செல்வராஜு ஆகியோர் கராத்தே பெல்ட் சான்றிதழை வழங்கிப் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.