நாமக்கல்

வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை: வெளி மாநிலத்தவர் கைது

DIN

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த வெளி மாநிலத்தைச் சேர்ந்தவரை பரமத்தி போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி அருகே உள்ள இருக்கூரில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 
 தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பரமத்தி போலீஸார் இருக்கூர் காலனி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கு மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்த கமல் மகன் ராஜூவை  (30) கைது செய்து அவரிடமிருந்து  ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ராஜூ  பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்பனை செய்து கொண்டு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் இது குறித்து பரமத்தி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

SCROLL FOR NEXT