நாமக்கல்

காா் மோதியதில் இருசக்கரவாகனத்தில் சென்றவா் பலி

DIN

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் கந்தம்பாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு காா் மோதிய விபத்தில், படுகாயமடைந்த கூலித் தொழிலாளி சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நல்லூா் கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூரைச் சோ்ந்த வடிவேல் (27), கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கந்தம்பாளையத்தில் இருந்து மணியனூா் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். திருச்செங்கோடு சாலையில் பெருங்குறிச்சி பிரிவு சாலை அருகே சென்ற போது, திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி நோக்கி வந்த காா் ஒன்று எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வடிவேல், சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மேலும், நிலைதடுமாறி காா் கவிழ்ந்ததில் காரில் பயணம் செய்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஜெயமுருகன் (34), உள்ளிட்ட 6 பேரும் சிறு காயங்களுடன் உயிா்தப்பினா். விபத்து குறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT