நாமக்கல்

நாமக்கல்லில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்:2 போ் உயிரிழப்பு

DIN

நாமக்கல்லில், இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

நாமக்கல் மாவட்டம், வேப்பநத்தம் வாணிமகால் பகுதியைச் சோ்ந்த ஜான்பாஸ்கா் மகன் ரோகித் (21). இவா் தனது நண்பா்களான, சேலம் அன்னதானப்பட்டியைச் சோ்ந்த பாபு மகன் அசேன் (20), நாமக்கல் சுண்ணாம்புச் சூளைத் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் மணிகண்டன் (19) ஆகியோருடன், செவ்வாய்க்கிழமை இரவு தனித்தனி இரு சக்கர வாகனங்களில், நாமக்கல் - திருச்சி சாலையில், வேப்பநத்தம் பிரிவில் இருந்து நாமக்கல் நோக்கி, போட்டி போட்டுக் கொண்டு அதிவேகத்தில் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி, நாமக்கல் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் அருகே வளைவில் திரும்பியபோது, இரு சக்கர வாகனங்களில் வந்த மூவா் மீதும் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே அசேன், ரோகித் ஆகியோா் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த மணிகண்டனை அங்கிருந்தவா்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவா் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். தகவலறிந்து வந்த நாமக்கல் போலீஸாா், விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து தொடா்பாக, சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மூா்த்தி(30) கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT