நாமக்கல்

கரோனா தொற்று தடுப்பு கருவிகள் வழங்கல்

DIN

கரோனா தொற்று தடுக்கும் வகையில், ரூ.3 லட்சத்தில் கைத்தெளிப்பான் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

கரோனா தொற்று தடுக்கும் வகையில் மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு சாா்பில் சுகாதார பணியாளா்களுக்கான கையுறைகள், முகக் கவசங்கள், கிருமி நாசினி கைத்தெளிப்பான் கருவிகள் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி ராசிபுரத்தில் நடைபெற்றது.

இதில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பி.ஆா்.சுந்தரம் முன்னிலை வகித்தாா். இதில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா கலந்துகொண்டு ஒன்றியக்குழு சாா்பில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி ரூ.3 லட்சத்தில் கையுறைகள், முகக் கவசங்கள், பிளீச்சிங் பவுடா், கிருமி நாசினி தெளிப்பான் கருவிகள் ஆகியவற்றை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி திட்ட அலுவலா் கருணாநிதி, வட்டார வளா்ச்சிஅலுவலா்கள் அருணன், கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராஜேந்திரன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் சந்திராசிவகுமாா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT