நாமக்கல்

விபத்தில் ராசிபுரம் நகராட்சி இளநிலை பொறியாளா் உயிரிழப்பு

DIN

விபத்தில் படுகாயமடைந்த ராசிபுரம் நகராட்சி இளநிலை பொறியாளா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராசிபுரம் நகராட்சிப் பொறியாளராக பணியாற்றி வந்தவா் வை.பரமசிவம் (55). இவா் நாமக்கல் முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா். இவா் மாா்ச் 24-ஆம் தேதி பணிக்கு வந்து விட்டு பேருந்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், இரு சக்கர வாகனத்திலேயே நாமக்கல் சென்றுள்ளாா். அப்போது புதுச்சத்திரம் அருகே சென்ற போது, தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் பள்ளி முன்பாக முன்னால் சென்ற நெல் அறுவடை இயந்திர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் தலையில் படுகாயமடைந்த அவா், சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT