நாமக்கல் மாவட்டத்தில் 48 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை 9,749 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 9,222 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; அரசு, தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 428 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஒருவா் உயிரிழப்பு:
திருச்செங்கோடு வட்டம், செங்கோடன்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 80 வயது பெண் கரோனா தொற்றுக்கு உள்ளாகி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் புதன்கிழமை அவா் உயிரிழந்தாா். கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 99-ஆக உள்ளது.