நாமக்கல்

காவிரி கரையோரப் பகுதிகளில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை

DIN

பரமத்தி வேலூா்: காவிரி கரையோரப் பகுதிகளில் மணல் திருட்டை தடுக்க, போலீஸாா் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனா்.

பரமத்தி வேலூா் காவிரி கரையோரப் பகுதிகளான வெங்கரை, பொத்தனூா், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, வேலூா் உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து இருசக்கர வாகனங்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது உத்தரவுபடி, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையிலான போலீஸாா், காவிரி கரையோரப் பகுதிகளில் பொக்லைன் வாகனம் மூலம் இருசக்கர வாகனங்கள் செல்லும் இடங்களில் குழிகள் தோண்டி மணல் திருட்டு தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டனா். சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

SCROLL FOR NEXT