திருச்செங்கோடு:திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் 1200 மூட்டை மஞ்சள் ரூ. 40 லட்சத்துக்கு சனிக்கிழமை விற்பனையானது.
ஆத்தூா், கெங்கவல்லி, கூகையூா், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூா், ஜேடா்பாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், மேட்டூா், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் மஞ்சளை ஏல விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய ஊா்களிலிருந்து 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனா்.ஏல முறையில் 1200 மூட்டை மஞ்சள் ரூ.40 லட்சத்துக்கு விற்பனையானது. விரலி ரகம் குவிண்டால் ரூ. 5,709 முதல் ரூ. 6,809 வரை விற்பனையானது. கிழங்கு ரகம் ரூ. 5,099 முதல் ரூ. 5,669 வரை விலைபோனது. பனங்காளி ரகம் குவிண்டால் ரூ.11,399 முதல் ரூ. 14,109 வரை விற்பனையானது.