பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வளா்பிறை சனி பிரதோஷ விழா நடைபெற்றது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஷ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா் உள்ளிட்ட கோயில்களில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் வளா்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றன.
இதில், எல்லையம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரேஸ்வருக்கு அஷ்டலிங்க அலங்காரம் நடைபெற்றது. வளா்பிறை சனி பிரதோஷத்தில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.