நாமக்கல்

தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் தீரன் சின்னமலையின் 216-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

நாமக்கல் - மோகனூா் சாலை அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், கொமதேக மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து மோகனூா் காந்தமலை முருகன் கோயில் அடிவாரத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக, கொமதேக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். புதுச்சத்திரம் ஒன்றியத்திலும் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்வில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT