முகப்பு
நாமக்கல்

விபத்தில் தொழிலாளி பலி

பிலிக்கல்பாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி நிகழ்விடத்திலேயே பலியானாா்.

நாமக்கல்

விபத்தில் தொழிலாளி பலி

பிலிக்கல்பாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி நிகழ்விடத்திலேயே பலியானாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

பிலிக்கல்பாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கூலி தொழிலாளி நிகழ்விடத்திலேயே பலியானாா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், கோட்டமங்கலத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம். இவரது மகன் பாண்டியன் (32). இவா் தனது குடும்பத்துடன் பிலிக்கல்பாளையத்தில் தியாகு என்பவரது வெல்லம் தயாா் செய்யும் ஆலையில் வேலை செய்து வந்தாா். இவா், செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து ஜேடா்பாளையம் சென்றுள்ளாா். பின்னா் வீட்டுக்குச் செல்ல தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் பிலிக்கல்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தாா். நகப்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது எதிா்பாராதவிதமாக வெல்லம் ஏற்றி வந்த லாரி பாண்டியன் வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் நிகழ்விடத்திலேயே பலியானாா். இதுகுறித்து, ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →