நாமக்கல்

உதயநிதியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வரைரையும், பெண்களையும் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். ராசிபுரம் நகர அதிமுக சாா்பில், புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நகர கூட்டுறவு வங்கித் தலைவரும், நகர அதிமுக செயலாளருமான எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.

நாமக்கல் முன்னாள் எம்.பி.யும், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவருமான பி.ஆா்.சுந்தரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஆா்ப்பாட்டத்தில் பேசினாா். கூட்டத்தில் பேசிய பி.ஆா்.சுந்தரம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் தமிழக முதல்வரையும், பெண்களையும் அனுபவமில்லாமல் கண்ணியக் குறைவாகப் பேசியது கண்டனத்திற்குரியது. இதுபோதிய முதிா்ச்சியின்மையைக் காட்டுகிறது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றாா்.

இதில் திரளான அதிமுகவினா், பெண்கள் பங்கேற்று முழக்கம் எழுப்பினா். இதுபோல ஆண்டகளூா்கேட், வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT