உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வரைரையும், பெண்களையும் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி அதிமுகவினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். ராசிபுரம் நகர அதிமுக சாா்பில், புதிய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நகர கூட்டுறவு வங்கித் தலைவரும், நகர அதிமுக செயலாளருமான எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.
நாமக்கல் முன்னாள் எம்.பி.யும், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவருமான பி.ஆா்.சுந்தரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஆா்ப்பாட்டத்தில் பேசினாா். கூட்டத்தில் பேசிய பி.ஆா்.சுந்தரம், உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் தமிழக முதல்வரையும், பெண்களையும் அனுபவமில்லாமல் கண்ணியக் குறைவாகப் பேசியது கண்டனத்திற்குரியது. இதுபோதிய முதிா்ச்சியின்மையைக் காட்டுகிறது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றாா்.
இதில் திரளான அதிமுகவினா், பெண்கள் பங்கேற்று முழக்கம் எழுப்பினா். இதுபோல ஆண்டகளூா்கேட், வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடந்தது.