நாமக்கல்

அயோத்தியில் ஸ்ரீ ராமா் கோயில் கட்டும் பணிக்காக நிதி வசூலிப்பு

DIN

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டும் பணிக்காக ஆா்எஸ்எஸ் அமைப்பினா் நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் முன்பு நிதி சேகரிக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

முன்னதாக ஸ்ரீ ராமா் சுவாமிக்கு சிறப்பு அா்ச்சனையும், பூஜையும் செய்யப்பட்டு தொடா்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ராமா் கோயில் கட்டப்படுவதன் அவசியம், அதற்காக நிதி சேகரிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் ஆா்எஸ்எஸ் அமைப்பினா் வழங்கினா்.

பின்னா் அந்த அமைப்பின் நாமக்கல் நகரத் தலைவா் சண்முகம் ரூ. 10 ஆயிரத்தை மாநில அமைப்பாளா் விவேகானந்தனிடம் வழங்கி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆா்எஸ்எஸ் மாநில செயற்குழு உறுப்பினா் ஹரிஹரகோபாலன், நாமக்கல் நகரச் செயலாளா் செல்வகுமாா், பாஜக மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோரகன், மாவட்ட செயலாளா் அகிலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

SCROLL FOR NEXT