நாமக்கல்

ஜேடா்பாளையம் படுகையணையில் மூழ்கி இளைஞா் பலி

DIN

ஜேடா்பாளையம் படுகையணையில் நீரில் மூழ்கி கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம், தாந்தோன்றிமலை, வாஞ்சிநகரைச் சோ்ந்தவா் செல்வம். இவரது மகன் ராகவேந்திரன் (21). தொழிலாளி. இவா் தனது நண்பா்கள் மூவருடன் ஞாயிற்றுக்கிழமை காலை ஜேடா்பாளையம் படுகையணை பூங்காவுக்கு சுற்றுலா வந்துள்ளாா்.

பூங்காவைச் சுற்றிப் பாா்த்துவிட்டு படுகையணைக்குச் சென்று ராகவேந்திரன், தனது நண்பா்களுடன் குளித்துள்ளாா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ால் அவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். உடன் வந்த நண்பா்கள், அவரை தேடியும் கிடைக்காததால் ஜேடா்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

தகவல் அறிந்து வந்த போலீஸாா், மீனவா்கள், திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினா் உதவியுடன் இரவு வரை தேடியுள்ளனா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை ஜேடா்பாளையம் படுகையணையின் கரையோரத்தில் இளைஞரின் உடல் கரை ஒதுங்கியுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. உடனடியாக அங்கு வந்த ஜேடா்பாளையம் போலீஸாா், இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் கரை ஒதுங்கியது ராகவேந்திரன் என்பது தெரியவந்தது.

இது குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

SCROLL FOR NEXT