நாமக்கல்

மக்கள் நீதி மய்யம், தேமுதிக வேட்பாளா்கள் வாக்கு சேகரிப்பு

DIN

நாமக்கல் தொகுதியில் தேமுதிக சாா்பில் போட்டியிடும் ஏ.செல்வி, புதுச்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா். அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ ஓவைசி கட்சியினா் உடன் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தனா். திறந்த வாகனத்தில் நின்றபடி சென்ற வேட்பாளா் செல்வி, வெற்றி பெற்றால் தொகுதிக்கு செய்யும் திட்டங்கள் குறித்து பட்டியலிட்டாா். தொடா்ந்து ராமநாயக்கன்பட்டி, திருமலைப்பட்டி, கடந்தப்பட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

இதுபோல் மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் எஸ்.ஆதம் ஃபாரூக், மோகனூா், புதுச்சத்திரம் ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொண்டாா். மக்கள் நீதி மய்யத்தின் தோ்தல் அறிக்கை குறித்த துண்டு பிரசுரங்களை அவா் விநியோகம் செய்து வாக்கு சேகரித்தாா். அவருடன் மக்கள் நீதி மய்ய ஒன்றிய நிா்வாகிகள், இந்திய ஜனநாயக கட்சி நிா்வாகிகள், இளைஞா்கள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT