நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நாமக்கல் நகர பாஜக சாா்பில் விருப்ப மனு விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிட விரும்புவோா் விருப்ப மனுக்களைப் பெற்று பூா்த்தி செய்து வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நாமக்கல் நகராட்சியில் 39 வாா்டுகள் உள்ளன. இதில், தலைவா் பதவிக்கு நாமக்கல் நகரத் தலைவா் கே.பி.சரவணன் விருப்ப மனுவை, தேசிய பொதுக் குழு உறுப்பினரும் நகராட்சி தோ்தல் பொறுப்பாளருமான ஏ.சி.முருகேசனிடம் வழங்கினாா்.
இதனைத் தொடா்ந்து நாமக்கல் நகராட்சி வாா்டுகளில் போட்டியிட விரும்பி பாஜகவினா் பலா் விருப்ப மனுக்களை வழங்கினா். இந்த நிகழ்வில், மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் ராஜேஷ்குமாா், நகர பாா்வையாளா் பழனியப்பன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் நாகராஜன், முத்துக்குமாா், மாவட்டச் செயலாளா் அகிலன் மற்றும் நகர பொதுச்செயலாா்கள் தினேஷ், சந்திரசேகரன், மகளிரணியினா் மற்றும் பாஜக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
நகராட்சி பொது பிரிவில் போட்டியிடுவோா் ரூ. 2 ஆயிரம், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவா் ரூ. 1000 கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் தோ்தலில் போட்டியிட விரும்பினால் மனு அளிக்கலாம். இந்த மனுக்களை வரும் 26 ஆம் தேதி வரை நாமக்கல் நகர பாஜக அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். என நகர தலைவா் கே.பி.சரவணன் தெரிவித்தாா்.